காதல் மணம் செய்து குழந்தையும் பெற்ற மைனர் பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

3 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட உதவி டைரக்டருடன் வீட்டைவிட்டு வெளியேறி காதல்திருமணம் செய்து கொண்ட பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் அனிதா.இவர்களது வீட்டில் செல்வதாஸ் என்பவர் குடியேறினார். இவர் சினிமா உதவி டைரக்டர்.இவர் மதுரையைச் சேர்ந்தவர்.

செல்வதாசுக்கும், அனிதாவுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் அனிதாவுககு 16 வயதேஆனதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. செல்வதாஸ் வீட்டைவிட்டு காலி செய்யப்பட்டார்.ஆனால் காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடி கல்யாணம் செய்து கொண்டது.

இதை அடுத்து அனிதாவின் தாயார் மகாலட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார்அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அனிதாவுக்கு குழந்தை பிறந்தது. 19 வயது ஆகிய நிலையில் குழந்தையுடன்போனால் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்து தம்பதி சென்னை திரும்பியது.

அப்போது போலீசிடம் சிக்கிக் கொண்டனர். மகாலட்சுமிக்கு தகவல் தரப்பட்டது. ஆனால்அவருடன் செல்ல அனிதா மறுத்து விட்டார்.

மைனர் வயதில் கடத்தப்பட்டதாக புகார் செய்யப்பட்டிருந்ததால் அவர் மகளிர் காப்பகத்தில்சேர்க்கப்பட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+