காதல் மணம் செய்து குழந்தையும் பெற்ற மைனர் பெண் கைது
சென்னை:
3 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட உதவி டைரக்டருடன் வீட்டைவிட்டு வெளியேறி காதல்திருமணம் செய்து கொண்ட பெண் கைது செய்யப்பட்டார்.
செல்வதாசுக்கும், அனிதாவுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் அனிதாவுககு 16 வயதேஆனதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. செல்வதாஸ் வீட்டைவிட்டு காலி செய்யப்பட்டார்.ஆனால் காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடி கல்யாணம் செய்து கொண்டது.
இதை அடுத்து அனிதாவின் தாயார் மகாலட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார்அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அனிதாவுக்கு குழந்தை பிறந்தது. 19 வயது ஆகிய நிலையில் குழந்தையுடன்போனால் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்து தம்பதி சென்னை திரும்பியது.
அப்போது போலீசிடம் சிக்கிக் கொண்டனர். மகாலட்சுமிக்கு தகவல் தரப்பட்டது. ஆனால்அவருடன் செல்ல அனிதா மறுத்து விட்டார்.
மைனர் வயதில் கடத்தப்பட்டதாக புகார் செய்யப்பட்டிருந்ததால் அவர் மகளிர் காப்பகத்தில்சேர்க்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications