மனித உரிமை கமிஷனில் ஸ்டாலின் மனைவி வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தங்கள் வீட்டிற்குள் நுழைந்து போலீசார் மனித உரிமையை மீறி நடந்து கொண்டதாக சென்னை நகர மேயர்மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா மனித உரிமை கமிஷனிடம் தெரிவித்துள்ளார்.
வீட்டில் ஸ்டாலின் இல்லை என்று சொன்னதை கேட்காத போலீசார், ஸ்டாலின் மனைவியின் கையை பிடித்துஇழுத்து தள்ளிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்ததாக ஸ்டாலின் மனைவி துர்காவும், ஊழியர்களும் சென்னை மனிதஉரிமை கமிஷனில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தனர்.
தங்கள் வீட்டுக்கு வந்த போலீசார் மனித உரிமையை மீறி நடந்து கொண்டனர் என்று அவர்கள் அந்தவாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
இந்த எழுத்துபூர்வ வாக்குமூலத்தை வக்கீல் ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மனித உரிமை கமிஷனில் சமர்ப்பித்தார்.இந்த வாக்குமூலம் மீதான விசாரணை மீண்டும் வரும் 20ம் தேதி நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications