For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறையாரில் சிறைக் கைதி மரணம்

By Staff
Google Oneindia Tamil News

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள பொறையார் சிறையில் உடல்நலக் குறைவால் ஒரு கைதி மரணமடைந்தார்.

சாராயம் விற்றதற்காக செம்பனார்கோவில் என்ற கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் என்பவரின் மகன்ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது கள்ளச் சாராயம் விற்றதற்காக வழக்குத் தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பிறகு,இவர் பொறையார் என்ற இடத்தில் உள்ள கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அங்கு, கடந்த சில நாட்களாக ராஜேந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கடந்த செவ்வாய்கிழமைசிறைச்சாலை மருத்துவர்கள் இவரது உடல்நிலையைப் பரிசோதித்தனர். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால்மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு ராஜேந்திரனை எடுத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராஜேந்திரனின் உயிர் பிரிந்தது. இதுகுறித்து,மயிலாடுமுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும்,கோட்டாட்சியர் கலையரசியும், கைதியின் மரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X