உத்தராஞ்சலை இன்று தாக்கிய லேசான பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உத்தராஞ்சல் மாநிலத்தில் வியாழக்கிழமை காலை 11.26 மணிக்கு லேசான பூகம்பம் ஏற்பட்டது,
இதையடுத்து இந்தியாவின் பல பகுதிகளிலும் அவ்வப்போது லேசான பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரமும்குஜராத்தின் கட்ச் பகுதியில் லேசான பூகம்பம் ஏற்பட்டது. ஆனால் பொருளிழப்போ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
புதன்கிழமை, மேகலாயாவின் தலைநகர் ஷில்லாங்கிலும், அசாம் தலைநகர் கெளஹாத்தியிலும் லேசான பூகம்பம்ஏற்பட்டது.
இந்நிலையில் உத்தராஞ்சல் மாநிலத்தில் வியாழக்கிழமை லேசான பூகம்பம் ஏற்பட்டது. காலை 11.26 மணிக்குஏற்பட்ட இந்தப் பூகம்பம், ரிக்டர் அளவு கோலில் 4.1 என்று பதிவாகி உள்ளது.
பொருளிழப்பு, உயிரிழப்பு குறித்து எந்த விதமான தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications