மன நலக் காப்பகங்களை மூட அரசு உத்தரவிடவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் மன நலக் காப்பகங்களை மூடும்படி அரசு இன்னும் உத்தரவுபிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில நலத்துறை செயலாளர் சையது முனீர்கோடா கூறும்போது:

மன நலக் காப்பகங்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இன்னும்அதுபோன்ற உத்தரவை அரசு பிறப்பிக்கவில்லை.

தீவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சில நோயாளிகளை அவர்களது குடும்பத்தினர் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர். ஏர்வாடி தவிர குணசீலம், மதுரை கோரிப்பாளையம், நாகூர், திருவிடை மருதூர், குற்றாலம், காஞ்சிபுரம்ஆகிய இடங்களிலும் தனியார் மன நலக் காப்பகங்கள் உள்ளன.

இந்தக் காப்பகங்களில் உள்ள மன நோயாளிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டரீதியான, மருத்துவரீதியான முடிவை மாநில அரசு தீவிர ஆலோசனைக்குப் பிறகு எடுக்கும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+