ஏர்வாடி - மன நலக் காப்பகங்களை மூட அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து குறித்து நீதிவிசாரணை நடத்தவும், அங்குள்ளஅனைத்து 16 மனநலக் காப்பகங்களையும் மூடுவதற்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மனநலக் காப்பகம் ஒன்றில் கடந்த திங்கள்கிழமை அதிகாலைஏற்பட்ட கொடூர தீவிபத்தில் 28 பேர் தீயில் கருகி இறந்தனர். மேலும் பலர் படுகாயமுற்றனர்.

இங்குள்ள மன நோயாளிகள் அனைவரும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர். இதனால்தான், மன நோயாளிகள்தப்பிக்க வழியில்லாமல், தீயில் வெந்து மடிந்துள்ளனர். எனவே, இந்த விபத்து குறித்து விசாரித்து, அறிக்கைஅனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்கூறியிருப்பதாவது:

ஏர்வாடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தைக் கருத்தில்கொண்டு, அங்கு செயல்பட்டு வரும் 16 தனியார் மனநலக்காப்பகங்களையும் மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடுகிறது.

அதன்படி, அங்கிருந்து மனநோயாளிகள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள். மேலும், அங்கு நடந்ததீவிபத்து பற்றி நீதிவிசாரணை நடத்த அரசு உத்தரவிடுகிறது என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+