படிக்காமலேயே சான்றிதழ் பெற முயன்ற போலி மாணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்லூரியில் படிக்காமலேயே கோர்ட் மூலம் டிகிரி சான்றிதழ் பெற முயற்சித்த மயிலாடுதுறையைச் சேர்ந்தமாணவர் ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவர் கடந்த 1991ம் ஆண்டு தொலைதூரக் கல்வி மூலம்சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். பட்டம் பெற்றதாக கூறி, அதற்கான டிகிரி சான்றிதழை கடந்த 1999ம்ஆண்டு மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் தொலைத்துவிட்டதாக, மயிலாடுதுறை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தனக்கு பி.எட். பட்டம் முடித்ததற்ாகன டூப்ளிகேட் சான்றிதழ் வழங்குமாறு பல்கலைக்கழகதேர்வுத்துறைக்கு கடிதம் எழுதினார். இதற்கு பல்கலைக்கழகத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால், தனக்கு உடனே டூப்ளிகேட் சான்றிதழ் வழங்குமாறு பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார் சிதம்பரநாதன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மாணவர் சிதம்பரநாதன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.எட் படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பொய்யானகோரிக்கயுடன் இவர் நீதிமன்றத்துக்கு வந்திருப்பது இதன்மூலம் தெளிவாகிறது.

மேலும் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்துடன், போலீசார் அளித்த சான்றிதழின் நகலைத்தான்அனுப்பியுள்ளார். ஆனால், போலீசார் அளித்ததாகக் கூறப்படும் சான்றிதழ் உண்மையானதா என்ற சந்தேகமும்தற்போது எழுந்துள்ளது.

இதன்மூலம், பல்கலைக்கழகத்தையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றி சான்றிதழ் பெற இந்த மனுதாரர் முயற்சிக்கிறார்என்பது தெளிவாகிறது. எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.

மேலும், மனுதாரர் வழக்குத்தொகையாக ரூ. 5,000 செலுத்த வேண்டும். போலீசார் இவரை விசாரித்து தேவையானகுற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+