நாயை அடித்தவரைக் கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பக்கத்து வீட்டுக்காரரின் நாயும் தனது நாயும் சண்டை போட்டுக் கொண்டபோது பக்கத்து வீட்டுக்காரரின் நாயைஅடித்தவர் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறையும், உடந்தையாகஇருந்த அவரது தாய்க்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்தது 1996ல். திருவள்ளூர் மாவட்டம் தலையாரிபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கணேசன். இவரது மனைவி பூபதியம்மாள். இவர்களது மகன் ஆண்டியப்பன்.

ஆண்டியப்பன் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இருவரது வீட்டிலும் நாய்கள் வளர்த்தார்கள்.சம்பவ தினத்தன்று இரு வீட்டு நாய்களும் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டன.

இதையடுத்து தனது நாய் கடிபட்டு விடப்போகிறதே என்ற கவலையில் ஆண்டியப்பன் வீட்டு நாயை கல்லால்அடித்து உதைத்துத் துரத்தி தனது நாயைக் காப்பாற்றியுள்ளார் ராமகிருஷ்ணன்.

இதில் ஆண்டியப்பன் வீட்டு நாய் படுகாயமுற்றது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்துஆண்டியப்பனும் அவரது தாயார் பூபதியம்மாளும் கோபமுற்றனர்.

வீட்டில் இருந்த உருட்டுக் கட்டைகளுடன் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த அவர்கள் அவரை சரமாரியாகஅடித்துள்ளனர். இதில் ராமகிருஷ்ணன் அங்கேயே இறந்தார்.

இதையடுத்து பூபதியம்மாளும், ஆண்டியப்பனும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது செங்கல்பட்டு செசன்ஸ்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

விசாரணையின் இறுதியில், ஆண்டியப்பனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், பூபதியம்மாளுக்கு ஒரு ஆண்டுசிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+