தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வா?
ஈரோடு:
மத்திய திட்டக்கமிஷன் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி உள்தாலும்,விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் கொடுப்பதால் ஆண்டுக்கு ரூ.600 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும்காரணத்தாலூம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள்மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் நுகர்வோருக்கான மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர தமிழக அரசுக்குவேறு வழி கிடையாது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வியாழக்கிழமை மின்துறை பணிகள் குறித்து ஆய்வு நடத்த தமிழக மின் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடுவந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:
தமிழக மின் வாரியத்தில் நிதி நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க மின் கட்டணத்தை உயர்த்துவதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து அறிவிப்பு வரும் பட்ஜெட்கூட்டத்தொடரின் போது விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications