அரை நிர்வாணமாக்கப்பட்ட பெண்: வன அதிகாரிகள் மீது புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்வராயன் மலையில் விறகு பொறுக்கச் சென்ற பெண்ணின் சேலையைப் பறித்து, அவரை அரைநிர்வாணமாகஊருக்குள் அழைத்துச் சென்றதாக மனித உரிமைக் கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு மனித உரிமைக்கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சி அருகே உள்ளது கல்வராயன் மலை. இந்த மலையை ஒட்டிய கிராமங்களில்வசிக்கும் பெண்கள் சமையலுக்கு விறகு பொறுக்குவதற்கு இந்த மலைக்குச் செல்வதுண்டு. அவ்வாறு அக்கராயபாளையத்தைச் சேர்ந்த ராஜாத்தி என்ற பெண் விறகு பொறுக்க இந்த மலைக்குச் சென்றார்.

விறகு பொறுக்கும்போது மரங்களில் சிக்கி சேலை கிழிந்து விடும் என்பதால், அதை கழற்றி வைத்துவிட்டு விறகுபொறுக்கினார். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை அதிகாரிகள், பச்சை மரத்தை வெட்டியதாகக் கூறிராஜாத்தியை மிரட்டியிருக்கிறார்கள்.

பிறகு, அதே கோலத்தில் வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் ஊருக்குள் தெருத்தெருவாக அழைத்து வந்துள்ளனர்.அப்போது அதிகாரிகளிடம் ராஜாத்தி, "எனது சேலையைக் கொடுத்துவிடுங்கள், நான் ஊருக்குள் வருகிறேன்"என்று கெஞ்சியிருக்கிறார்.

ஆனால், அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டதால், தனது கைகளால் நெஞ்சை மறைத்தவாறு தெருவுக்குள்வந்திருக்கிறார் ராஜாத்தி.

பின்னர், இதுகுறித்து சென்னை மனித உரிமை கமிஷனில் ராஜாத்தி புகார் கொடுத்துள்ளார். அதை விசாரித்தநீதிபதி சம்பந்தம், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+