"நீதியே வெல்லும்" - டான்சி வழக்கு பற்றி கருணாநிதி
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது தவறு இல்லை என்று சார்பதிவாளர் சாட்சியளித்திருக்கிறார். இது பற்றிக்கூறுகையில் நீதியே வெல்லும் என்றும் நீதிதான் வெல்லவேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதிஅழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அதில், முதல்வர் ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நான்தான் இடமதிப்பைத் தவறுதலாகப்போட்டுவிட்டேன். ஜெயலலிதா மீது எந்த தவறும் இலலை. மேலும் அரசுக்கும், இந்த விஷயத்தில் நஷ்டம்ஏற்படவில்லை என்றார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று கருதக் கூடிய வாய்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து,கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி நான் எப்போதும் கருத்து கூறுவதில்லை. ஆனால், "நீதியே வெல்லும், நீதிதான்வெல்லவேண்டும்" என்றார்.
மேலும், செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அசோக்குமாரின் கருத்துக்கள் நீக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, நீதிபதியின்சில குறிப்புகள் மட்டும்தான் நீக்கப்பட்டிருக்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications