உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி யாருடன்?
சென்னை:
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிடுவதா அல்லதுதனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்துகட்சியின் செயற்குழுதான் கூடி முடிவெடுக்கும். முதலில் தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் கட்சியின் செயற்குழுதான்முடிவெடுக்கும். தனிப்பட்ட முறையில் அதை செய்ய முடியாது. கூட்டணிக் கட்சிகளையும் இது தொடர்பாககலந்தாலோசிப்போம்.
ஏர்வாடி பரிதாபக் கொலைகள் தொடராமல் இருக்க வேண்டுமானால், மன நலக் காப்பகங்களில் நோயாளிகளின்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். சட்டவிரோதமான காப்பகங்களைத் தடை செய்ய வேண்டும்என்றார் கருணாநிதி.