பனை மரத்தில் ஏறி கைதி நூதன போராட்டம்
புதுக்கோட்டை:
திருமயம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், ஒரு பனை மரத்தில் மேறிக் கொண்டு, தன் மீதுபோடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறாவிட்டால், மரத்தில் இருந்து கீழே குதித்துவிடுவேன் என்று சிறைஅதிகாரிகளை மிரட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று கைதிகள் கழிப்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இவர்கண்ணிமைக்கும் நேரத்தில் சிறையில் இருந்த ஒரு உயரமான பனை மரத்தின் மீது ஏறிவிட்டார்.
தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால், தான் கீழே குதித்து விடுவேன் என்று காவலர்களைமிரட்டினார். விஷயம் அறிந்து சிறைத்துறை அதிகாரிகள் அவரைச் சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஆனால் அவர்தன் கோரிக்கையை கைவிடுவதாக இல்லை.
சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக மரத்திலிருந்து சூசை இறங்கியதும்தான் சிறைத்துறைஅதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications