For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமநாதபுரத்தில் பதட்டம்: பஸ்கள் ஓடவில்லை

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே ஜான்பாண்டியன் கட்சியை சேர்ந்த 2 பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டதைஅடுத்து அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்-சிக்கலில் தலித் கட்சியான தமிழக முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளரான கணேசபாண்டியன் மீதும் , அவரது உதவியாளர் வெள்ளையன் மீதும் மர்ம கும்பல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் 2 பேரும் கொல்லப்பட்னர்.வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்ததை அடுத்து ராமநாதபுரம்மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. சாதிக்கலவரம் நடக்காமல் இருக்க அங்கு பலத்த போலீஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாதிக் கலவரத்திற்கு பெயர் பெற்ற மாவட்டம் வியாழக்கிழமை மாலை இங்கு நடைபெற்றகுண்டு வீச்சில் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் 2 பேர்கொல்லப்பட்டனர்

இதனால் அந்த மாவட்டம் ழுழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் போன்றபகுதிகளில் பெரும்பாலான கடைகள், வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன.

பஸ் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ராமநாதபுரத்தில் இருந்து எந்த விதமான பஸ்சும் வெளிமாவட்டங்களுக்கு செல்லவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்சும் ராமநாதபுரத்திற்கு வரவில்லை .

பரமக்குடி பகுதியில், கடைகளை அடைக்குமாறு ஒரு கும்பல் ரகளை செய்து, திறந்திருந்த சில கடைகளையும் மூடவைத்தது.

வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க எல்லா இடத்திலும் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது. 1,000க்கும்அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் தொடர்ந்து ரோந்து பணியிலும்ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X