ஜாமீனை தளர்த்தக் கோரும் ரங்கநாதன் மனு தள்ளுபடி
சென்னை:
தமிழக சட்டசபை விரைவில் கூட இருப்பதால் தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை தளர்த்த வேண்டும் என்றுகோரி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை எம்.எல்.ஏ. ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஓய்வு பெற்ற நீதிபதியின் மகனிடம் தேர்தல் கேட்டு நிதி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட 6 வழக்குகள் இவர் மீதுதொடரப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
50 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இவர் ஜாமீன் காலத்தில்திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தினமும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்என்றும் நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரங்கநாதன் சென்னை உயர் நீதிமன்றததில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
"விரைவில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதால், சென்னைக்குச் செல்வதற்கேற்ப தனக்குவிதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும்" என்று அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் தள்புளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications