For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை டெஸ்டிலும் டெண்டுல்கர் ஆடமாட்டார்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

இலங்கையில் வருகிற 14ம் தேதி தொடங்கவிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர் தனது அதிரடி ஆட்டத்தில் அணிக்கு பலமுறை வெற்றிதேடித்தந்தவர். சில மாதங்களுக்கு முன், ஜிம்பாப்வேயில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள்போட்டியின் போது இவருடைய வலது கால் பெருவிரல் எலும்பில் சிறு முறிவு ஏற்பட்டது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து, டெண்டுல்கருக்கு ஓய்வு அவசியம் என்று டாக்டர்கள்கூறினர். இதனால், சமீகத்தில் இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் அவர்கலந்துகொள்ளவில்லை. ஆனால், இறுதிபோட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அவருடைய கால் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு சரியாகிவிட்டதா என்று அறிய முதலில் ஒருமுறை"ஸ்கேன்" செய்து பார்க்கப்பட்டது. அப்போது, இன்னும் முழுவதும் குணமாகவில்லை என்று அறிவிக்கப்பட்டது.இதனால், சச்சின் இறுதிப்போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டெஸ்டில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு மீண்டும் வியாழக்கிழமை இரவு "ஸ்கேன்" பரிசோதனை செய்யப்பட்டது. அவருடையஎலும்பு முறிவு இன்னும் பூரண குணமடையவில்லை என்று "ஸ்கேன்" பரிசோதனையின் முடிவுகள் தெரிவித்தன.

இதையடுத்து, "அவர் இலங்கையில் நடக்கும் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார். ஆனால்,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என்று நம்புகிறோம்"இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X