வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் மன நோயாளிகள்
ஏர்வாடி:
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பாதஉறவினர்கள் அவர்களை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து சிறையில்அடைத்துவிடுமாறு போலீசாரை கேட்டுக் கொள்கின்றனர் என்ற அதிர்ச்சியான தகவல்வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை அவர்களது உறவினர்கள் வீட்டிற்குஅழைத்துச் செல்ல விரும்பவில்லை. மேலும் அவர்களை ஏதாவது ஒரு வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு போலீசாரிடம் கேட்டுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின்சிகிச்சைக்கு தங்களால் செலவு செய்ய முடியாது என்பதாலும், அவர்களை தங்களால்கவனித்துக் கொள்ள முடியாது என்பதாலும், அவர்கள் மீது ஏதாவது ஒரு வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைக்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள் என்றார்.
மனநல காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முழுமையாக மனநலம்பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இவர்களில் பலருக்கும் நரம்புகள் சம்பந்தமான நோயால்பாதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதால் அவர்களை கட்டுப்படுத்தவும்முடிவதில்லை என்று கூறப்படுகிறது.
இவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல யாரும் தயாராக இல்லை.
தனியார் மனநல காப்பகங்கள் மூடப்பட்டு வருவது, மனநலம் பாதிக்கப்பட்டநோயாளிகளின் உறவினர்களுக்கு பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.
மிகவும் மனநலம் பாதிக்கப்பட்டு, முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமேஅரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அரசு கூறி உள்ளது.
மற்ற நோயாளிகளை அவர்களது உறவினர்கள் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.
ஆனால், பெரும்பாலானவர்கள் இதற்கு தயாராக இல்லை.
இந்த மன நலம் இல்லாத வளர்ந்த குழந்தைகள் இனி தான் அதிக சிரமங்களைஅனுபவிக்கப் போகிறார்கள் என்பது தான் மனதை வலிக்கச் செய்கிறது.