ராமதாஸ் ஒரு போலி டாக்டர்: கைது செய்ய தலித் இயக்கம் கோரிக்கை
சென்னை:
போலிச் சான்றிதழ் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மீது நடவடிக்கைஎடுத்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தாழ்த்தப்பட்டவர் என்று போலிச் சான்றிதழ் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்ற ராமதாஸ் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும. தலித் மக்களின் உயிரோடுவிளையாடும் ராமதாசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
ஆப்பிரிக்கா, டர்பனில் இனவெறிக்கு எதிரான நடைபெற உள்ள மாநாட்டு கூட்டத்தில், சாதிக் கொடுமை பற்றிபேச மத்திய அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து சென்னையில் மனிதசங்கிலிப் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் படித்து வரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவித் தொகை உடனடியாக கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும்.
கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பல்வேறு குற்றங்களை சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலித் இயக்கஇளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
திருமாவளவன் போன்றவர்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் விரைவில் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்வோம். ஆனால், திருமாவளவனுக்கு ராமதாசால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமானால் அதை பார்த்துக் கொண்டுநாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றனர்.