இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்த முடிவு
டெல்லி:
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்தி 18 வயது நிரம்பியவர்களைப்புதிய பட்டியலில் சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவுசெய்யுள்ளது.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில்,வரும் 2002 -ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தி அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
இதன்மூலம், இறந்துவிட்ட வாக்காளர்கள் மற்றும் செல்லாத வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்துநீக்கப்படும். மேலும், 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளமுடியும்.
2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜம்மூ-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்நடைபெற உள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களுக்கு இப்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலங்களான உத்ராஞ்சல், சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியமாநிலங்களுக்கும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிகவிரைவாக பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது.
அன்ைதது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்காளர்பட்டியல் சரிபார்க்கப்படும்.
இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையாளர் கூறினார்.