மேம்பால ஊழல்: வந்தது விசாரணை கமிஷன்- சிக்கலில் ஸ்டாலின்
சென்னை:
சென்னை பெரம்பூரில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்துவிசாரிக்க 3 நபர் சிறப்பு விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளத.
இந் நிலையில், சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் பல நிதிமுறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாக த.மா.கா. உள்ளிட்ட எதிர்க் கட்சியினர்சென்னை மாநகராட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.
சென்ற மாதம் 30ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த புகார்கள்குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பெரம்பூர் மேம்பால ஊழல் குறித்து விசாரிக்கசிறப்பு விசாரணை கமிஷன் அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து சென்னையில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பெரம்பூரில் மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளதாக எழுப்பப்பட்டுள்ளபுகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் இந்த விசாரணைக் கமிஷனின்தலைவராக இருப்பார். தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் ஓய்வு பெற்ற நிர்வாகஇயக்குனர் ஜி.ரத்தினவேலு மற்றும் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு தலைமைப்பொறியாளர் ஷியமளா தம்புராட்டி ஆகிய 2 பேரும் உறுப்பினராக இருப்பார்கள்என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது சென்னையில் 11 மேம்பால்கள் கட்டப்பட்டன.பெரம்பூர் பாலம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை மேயர் ஸ்டாலின் தான் இந்தபாலங்கள் கட்டுமானப் பணியை கண்காணித்து வந்தார்.
கட்டப்பட்ட 11 பாலங்களில் 10ல் ரூ. 12 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார்எழுந்துள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின், கருணாநிதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் கட்டப்பட்டு வரும் பெரம்பூர் பால ஊழல் விவகாரம் குறித்து விசாரிக்கஇப்போது சிறப்பாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications