ஹெராயினுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை - சுதாகரன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரன் தான் ஹெராயின் வாங்கவோ, பயன்படுத்தவோஇல்லை என்று கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவால் வளர்ப்பு மகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுதாகரன். இதையடுத்து அவரதுகல்யாணம் பிரும்மாண்டமாக நடத்தப்பட்டது. சில மாதங்கள் கழித்து அந்த நபருக்கும் எனக்கும் எந்தசம்பந்தமுமில்லை என்று ஜெயலலிதா அறிவித்தார்.
இந்நிலையில், சுதாகரன் சின்ன எம்.ஜி.ஆர் நற்பணி மன்றம் என்று ஒரு மன்றத்தை நடத்தி வந்தார். அதில் அவருக்குஉதவியாளராக இருந்த கோபு ஸ்ரீதர் என்பவரை தாக்கியதாகவும், 16 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள்வைத்திருந்தததாகவும் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 72 கிராம் போதைப்பொருள்தோட்டம் பாஸ்கரன் என்பவரிடமிருந்து வாங்கியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இப்போது, போதைப் பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் யாரிடமும் ஹெராஹயன் வாங்கவும் இல்லை, வைத்திருக்கவும் இல்லை. மேலும் நான் இதுவரைஹெராயினைப் பயன்படுத்தியதே இல்லை.
அவ்வாறு, நான் அதைப்பயன்படுத்தி இருந்தால் அது என் ரத்தத்தில் கலந்திருக்க வேண்டும். எனவே என் மீதுகுற்றம் சாட்டிய போலீஸ் வழக்கு தொடர்ந்த உடனே என் ரத்தத்தை பரிசோதனை செய்திருக்கலாம்.
என் மீது பொய் வழக்கு போட்டு என்னை பழிவாங்கும் நோக்குடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான் குற்றமற்வன். மேலும் எனக்கு சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உள்ளது. நான் முருக பக்தன் , கடவுளுக்குப்பயப்படுபவன். இந்த மாதிரிப் போதைப் பொருள் பழக்கம் எனக்கு இருந்தது கிடையாது.
ஏற்கனவே 2 முறை இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே சென்றிருக்கிறேன். அப்போது கோர்ட் விதித்தநிபந்தனைகள் எதையும் மீறாமல் இருந்திருக்கிறேன். எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்குமாறுகேட்டுக்கொள்கிறேன்.
இநத் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் மீண்டும் திங்கள் கிழமை விசாரணை தொடரும் என்றுஅறிவித்தார்.












Click it and Unblock the Notifications