சாட்டிங் மூலம் காதலித்து மணமுடித்த பெண் தற்கொலை
பெங்களூர்:
இ- மெயில் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் வரதட்சணை கேட்டு கணவன் துன்புறுத்தியதால்தற்கொலை செய்துகொண்டார்.
அவர் பெயர் கணேசமுருகன். இவர் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் பி.எச்டி.பட்டத்திற்காக ஆய்வு செய்தும் வருகிறார். ஆனால் இவருக்கு சொந்த நாடு இலங்கை ஆகும்.
நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதலும் நல்லபடியாக கல்யாணத்தில் முடிந்தது.
கல்யாணத்துக்குப்பின் தம்பதிகள் சிறிது காலம் லண்டனில் தங்கி இருந்தனர். பிறகு சிறிது காலத்திற்குஇலங்கையிலும் குடியிருந்தனர்.
இந்நிலையில் கணவன் மனையிடையே தகராறு ஏற்பட்டது. வரதட்சணைகேட்டு கணேசமுருகன் துன்புறுத்தியதாகக்கூறப்படுகிறது. இந்தத் தகராறு முற்றி கவிதாவை வீட்டுக்கு (பெங்களூருக்கு) கொண்டு வந்து விடும் அளவுக்குபோய்விட்டது.
இதையடுத்து, பெங்களூரில் இருந்து கொண்டு கவிதா தன் கணவரை இ - மெயில் மூலம் தொடர்பு கொண்டார்.
ஆனால் கணேசமுருகன் சரியாக பேசவில்லை.
இதனால் மனமுடைந்த கவிதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பானசுவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.












Click it and Unblock the Notifications