டெல்லியில் குண்டு வெடிப்பு
டெல்லி:
தெற்கு டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) இரவு ஒரு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர்காயமடைந்தனர். இதுபாகிஸ்தானிய கூலிப்படையின் செயலா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு ஆட்டோவில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று அதன் அருகே இந்த குண்டு வெடித்தது.இதில், ஆட்டோ பயணிகளில் ஒருவர் காயமடைந்தார். மேலும் குண்டு வெடித்தபோது அதன் அருகில் நின்றுகொண்டிருந்த மர்ம ஆசாமி ஒருவரும் காயமடைந்தார்.
ஆனால் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பின், அவர் அந்த இடத்தில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.குண்டு வைத்தது யார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று பெரும் சேதம் ஏற்படுத்தவும், பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர்அத்வானி ஆகியோரைக் கொல்லவும் திட்டமிட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளதாகபாதுகாப்புப்படை கருதியது.
சுதந்திர தினத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு அந்தச் சந்தேகத்தைஉறுதிசெய்யும் விதத்தில் இருப்பதாக பாதுகாப்பு படையினர் கூறினர்.
குண்டு வெடிப்பையடுத்து, டெல்லி போலீசார் பெரும் கலக்கத்தில் உள்ளனர். பொதுமக்களிடையேயும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications