தமிழக அரசு டிஸ்மிஸ் இல்லை - பெர்ணான்டஸ்
சென்னை:
தமிழ்நாட்டில் நடைபெறும் அதிமுக ஆட்சியைக் கலைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தேசிய ஜனநாயக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ்கூறினார்.
அப்போதுசந்தித்துவிட்டு வந்த பின் அவர் நிருபர்களுக்குப் பேட்டியின்போது அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோது தமிழகபோலீசார் அத்துமீறி நடந்துகொண்டனர். அதற்காக தமிழ்நாட்டில் நடைபெறும் அதிமுக ஆட்சியைக் கலைக்கும்திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.கூட்டணியில் உள்ள கட்சிகளின் உள் விவகாரங்களில் தே.ஜ. கூட்டணி தலையிடாது என்றார் பெர்ணான்டஸ்.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழக அரசின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால்திமுகவினர் திருப்தி அடைந்துள்ளனரா என்று கேட்டதற்கு அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications