22 ஏழை மாணவர்களுக்கு ரூ.5.5 லட்சம் நிதி உதவி அளித்தார் ஜெ.
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மேல் படிப்பு படிக்க இயலால் கஷ்டப்பட்டு வந்த 22 மாணவர்களுக்கு ரூ.5,50,000நிதி உதவி அளித்தார்.
ஆனால் ஏழ்மை நிலை காரணமாக இவர்களால் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பைத் தொடர முடியாமல்கஷ்டப்பட்டு வந்தனர். இது குறித்து, இவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினர்.
தாங்கள் மேற்படிப்பை தொடர உதவுமாறு அவர்கள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்து,இவர்களுக்கு உதவி அளிக்க முடிவெடுத்தார் ஜெயலலிதா.
தலைமைச் செயலகத்திற்கு வருமாறு 22 மாணவர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இவர்கள் 2 2 பேரும்சனிக்கிழமை தங்கள் குடும்பத்தினருடன் தலைமைச் செயலக்கத்துக்கு வந்து முதல்வரை சந்தித்தனர்.
முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 வழங்கினார் ஜெயலலிதா. முதல்வரின்நிதி உதவிக்கு மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.