யூ.டி.ஐ. ஊழலில் தொடர்பா?: மறுக்கிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யூ.டி.ஐ. ஊழல் விவகாரத்தில் தன் பெயரை சம்பந்தப்படுத்தி இருப்பது தவறான உள்நோக்கம் கொண்டது என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த புகாரை தமிழக முதல்வர் ஜெயலலிதா மறுத்தள்ளார். இது குறித்து அவர் சென்னையில் வெளியுட்டுள்ளஅறிக்கையில் கூறி இருப்பதாவது:
யூ.டி.ஐ. ஊழல் விவகாரத்தில் என் பெயரை தேவையின்றி சம்பந்தப்படுத்தி ஒரு செய்தி சில நாளிதழ்களில்வெளியிடப்பட்டுள்ளது.
யூ.டி.ஐ. ஊழல் விவகாரத்தில் என் பெயரை தொடர்பு படுத்தியிருப்பது தவறான உள்நோகம் கொண்டது. என்நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
யூ.டி.ஐ. தலைவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியே எழவில்லை. இந்த செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications