இலங்கை: விடுதலைப்புலிகளின் தளம் அழிக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை-சோரன்பட்டு பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் தளம் இலங்கை விமானப்படையால்வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.
மேலும், விடுதலைப்புலிகள் அங்கு தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த பலப்பல குடிசைகளும் முற்றிலும்அழிக்கப்பட்டன.
ஆனால், விடுதலைப்புலிகள் தரப்பில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது பற்றி தகவல் இல்லை என்று இலங்கைபாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
பெண் புலி தற்கொலை
வன்னி பகுதிகளில், இலங்கை ராணுவம் மேற்கொண்ட பலத்த தாக்குதலில் 5 விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட ஒரு பெண் விடுதலைப்புலி தற்கொலை செய்துகொண்டார்.
பொலனருவ பகுதியில் விடுதலைப்புலிகள் சுட்டதில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் அந்த அதிகாரிதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications