மாஜி தி.மு.க. அமைச்சர்கள் மீது விரைவில் எப்.ஐ.ஆர்.
சென்னை:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதற்காக, அவர்களின் சொத்து விபரங்களைச்சேகரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தமிழக புலனாய்வு போலீசார் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள்முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சொத்துக்கணக்கு, வருமானம் மற்றும் அவர்கள் நடத்தி வரும்தொழில்கள் ஆகியவை பற்றிய விபரங்களைச் சேகரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விசாரணையில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தெரிந்தால் உடனே எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும்உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பெரியசாமி மற்றும் அந்தியூர்செல்வராஜ் ஆகியோர் முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமி, பன்னீர்செல்வம் போன்றோரும் அளவுக்கு அதிகமாகசொத்துச்சேர்த்துள்ளதாக புகார் வந்துள்ளது.
இதையடுத்து இதுகுறித்து விசாரிப்பதற்கு எஸ்.பி. அருணாச்சலம் தலைமையில் ஒரு தனிப்படை ஆதாரங்களைதிரட்டி வருகிறது. ஆனால் இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.