ஆடி கார்த்திகை: ஆறுபடை வீடுகளில் கோலாகலம்
மதுரை:
ஆடி கார்த்திகை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும்ஆடி கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிருத்திகைகளில் சிறந்தது ஆடி கார்த்திகை. ஆடி கார்த்திகையின்போது, பக்தர்கள் முருகன் கோவிலுக்கு காவடிஎடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது.
ஆடி கார்த்திகை திருவிழா, ஞாயிற்றுக்கிழமையன்று முருகன் கோவில் கொண்டிருக்கும் ஆறுபடை வீடுகளிலும் மிகவிமரிசையாக கொண்டாடப்ட்டது.
திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர் சோலை, திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை ஆகியவை ஆறுபடை வீடுஎன்று அழைக்கப்படும். இந்த ஆறு திருத்தலங்களிலும் ஆடி கார்த்திகை விழா சிறப்ராக கொண்டாடப்பட்டது.
ஆறுபடை வீடுகளில் முதல் வீடாகக் கருதப்படும் திருப்பரங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆடி கார்த்திகைகோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும்நடைபெற்றன. பின்னர் உற்சவ மூர்த்தி முருகன் கார்த்திகை மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னைக்கு அருகில் உள்ள திருத்தணியிலும் ஆடி கார்த்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சரவணப் பொய்கையில் தெப்பத் திருவிழாநடைபெறுகிறது.
ஆறுபடை வீடுகளுக்கும் பெருந்திரளான பக்தர்கள் காவடி எடுத்துவந்தும், அலகு குத்தியும், மொட்டை அடித்தும்தங்கள் காணிக்கையை செலுத்தினர்.