தொடங்கியது பேரணி: அடக்க அடக்க தி.மு.க. வளரும் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எவ்வளவுக்கு எவ்வளவு தி.மு.கவை அடக்க நினைக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வளரும் என்று தி.மு.தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.கவின் கண்டன பேரணிக்கு அதிக அளவு போலீஸ் காவல்போடப்பட்டுள்ளது கேட்கப்பட்டபோது அவர் இந்த கருத்தை கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது போலீசார் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கண்டனபேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது.

10 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் இந்த பேரணி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. பெருந்திரளான தொண்டர்கள்இதில் கலந்து கொண்டுள்ளனர்.

பேரணியில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்களும் செவ்வாய்க்கிழமை இரவுமுதலே சென்னையில் குவியத் தொடங்கினர்.

முன்னதாக, பேரணி குறித்த ஏற்பாடுகளை கவனித்து வரும் தி.மு.க. எம்.பி.குப்புசாமி கூறுகையில், பேரணியில்பங்கு கொள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். மேலும் தொண்டர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள் என்றார்.

எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் பேரணி அமைதியாக நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்திருந்தாலும்கூட போலீசார் எந்த விதமான ரிஸ்கும் எடுக்கத் தயாராக இல்லை. சென்னை நகரம் முழுவதும் போலீசார்குவிக்கப்பட்டு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்து கருணாநிதி கூறுகையில், "போலீஸ் காவலை அதிகப்படுத்திபேரணியில் வெற்றி பெற வைக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு தி.மு.கவை அடக்கநினைக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தி.மு.க. வளரும்" என்றார்.

தி.மு.க. தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள பேரணியும் தொடர்ந்து நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+