டான்சி வழக்கு: ஜெ. அப்பீல் மீது நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி நில வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் செய்திருந்த மனு மீதானவழக்கு விசாரணை நாளை (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

சென்ற முறை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதாவும், அவரதுதோழி சசிகலாவும் நடத்தி வந்த ஜெயா பப்ளிகேஷன் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கின.

ஆட்சி மாற்றம்:

அந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா மற்றும் அவரதுஅமைச்சரக சகாக்கள் மீது ஊழல் வழக்குள் பலவற்றை தி.மு.க தொடர்ந்தது. இவற்றை விசாரிக்க 3 தனி சிறப்புநீதிமன்றங்களையும் தி.மு.க. அமைத்தது.

டான்சி வழக்கும் இந்த தனி நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்தது. டான்சி நிலங்களை வாங்கியதில் முறைகேடுநடந்துள்தாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.3 கோடி இழப்பு எற்பட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு காலம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தனி நீதிமன்றம்உத்தரவிட்டது.

இதனால் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இந்நிலையில் தனக்கு தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருந்தார்.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி:

இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது மீண்டும் ஜெயலலிதா முதல்வராகி உள்ளார்.

ஜெயலலிதாவின் அப்பீல் மனு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த அப்பீல் மனுமீதான விசாரணை, கடந்த 3ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீசன் முன்னிலையில் விசாரணைக்குவரவிருந்தது. ஆனால் குறிப்பிட்டபடி அன்று அப்பீல் மனு விசாரணைக்கு வரவில்லை. நிர்வாக வசதிக்காக இந்தமனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் ஜெகதீசன் மீது நம்பிக்கையில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே.ஜெயினிடம்சில வக்கீல்கள் கூறியதாலும், இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டதாலும்தான் 3ம் தேதி அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று பிறகுதெரியவந்தது.

மீண்டும் சு. சுவாமி மனு:

இந்நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்செய்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் அவர் அப்பீல் மனு மீதான விசாரணைக்கு ஊறு விளைவிக்கும்வாய்ப்புள்ளது. அதனால், இந்த வழக்கை முதலில் தொடர்ந்த தன்னையும் ஒரு வாதியாக இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தன் மனுவில் சுப்ரமணியம் சுவாமி கூறியிருந்தார்.

சாட்சியின் பல்டி:

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமையன்று, முன்னாள் சார்பதிவாளர் தங்கவேல், "டான்சி நிலம் வாங்கியதில்எந்த விதமான முறைகேடும் நடக்கவில்லை. நான்தான் தவறான விலைகளை குறிப்பட்டுவிட்டேன். டான்சி நிலவிவகாரத்தில் அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை" என்று கூறியிருந்தார்.

தங்கவேலின் கருத்தினால் டான்சி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அப்பீல்மனு மீதான விசாரணை திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதமன்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

இது குறித்து ஜெயலலிதாவின் வக்கீல் ஜோதி, "தங்கவேலு கூறிய கருத்தும் அப்பீல் மனு விசாரணையின் போதுஎடுத்துக்கூறப்படும்" என்று கூறினார்.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிதீர்ப்பளித்து. தனக்கு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில்அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த அப்பீல் மனுவும் திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிபாலசுப்ரமணியம் முன் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+