For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமருடன் திமுக எம்.பிக்கள் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

திமுக எம்.பிக்கள் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து ஜெயலலிதா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டனர்.

திமுக பேரணியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து அவர்கள் பிரதமரிடம் விளக்கினர். காலையில் கருணாநிதியுடன்தொலைபேசியில் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்த வாஜ்பாய், மிக ஆவேசத்துடன் காணப்பட்ட திமுக எம்.பிக்களை தனதுஇல்லத்தில் சந்தித்தார்.

ஜெயலலிதா அரசு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் எம்.பிக்கள் கேட்டுக் கொண்டனர்.

தே.ஜ. தூதுக்குழு வருமா?

மத்திய அமைச்சரும் பா.ஜ.க. பொதுச் செயலாளருமான வெங்கையா நாயுடு கூறுகையில், இந்த சம்பவம் குறித்துநேரில் அறிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தூதுக் குழுவை அனுப்புவது குறித்து விவாதித்து வருகிறோம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் ஜே.பி. மாத்தூர் கூறுகையில், தமிழகத்தில் நிலைமையை மத்திய அரசு தீவிரமாககண்காணித்து வருகிறது. உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X