சுடுகாட்டுக் கொட்டகை ஊழல்: முன்னாள் அமைச்சருக்குக் குற்றப்பத்திரிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ.23 லட்சம் சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்செல்வகணபதிக்கு இன்று (திங்கள்கிழமை) குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது, 1995-96ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 100 சுடுகாட்டுக் கொட்டகைகள்அமைத்ததில், ரூ.23 லட்சம் ஊழல் செய்ததாக, செல்வகணபதி உள்பட 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்திருந்தது.

இபிகோ பிரிவுகள் 120-பி, 420, 13(1)(டி) மற்றும் 13(2) ஆகியவற்றின் கீழ், இவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இந்த வழக்கின் மீதான விசாரணை, சிபிஐ நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,இந்த 6 பேருக்கும் குற்றப்பத்திரிகை வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று அந்த 6 பேரும் சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்து, குற்றப்பத்திரிகைகளைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த 6 பேரில், தற்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+