For Quick Alerts
For Daily Alerts
Just In
சுடுகாட்டுக் கொட்டகை ஊழல்: முன்னாள் அமைச்சருக்குக் குற்றப்பத்திரிகை
சென்னை:
ரூ.23 லட்சம் சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்செல்வகணபதிக்கு இன்று (திங்கள்கிழமை) குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
இபிகோ பிரிவுகள் 120-பி, 420, 13(1)(டி) மற்றும் 13(2) ஆகியவற்றின் கீழ், இவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்த வழக்கின் மீதான விசாரணை, சிபிஐ நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,இந்த 6 பேருக்கும் குற்றப்பத்திரிகை வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று அந்த 6 பேரும் சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்து, குற்றப்பத்திரிகைகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த 6 பேரில், தற்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]