For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுடுகாட்டுக் கொட்டகை ஊழல்: முன்னாள் அமைச்சருக்குக் குற்றப்பத்திரிகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரூ.23 லட்சம் சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்செல்வகணபதிக்கு இன்று (திங்கள்கிழமை) குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது, 1995-96ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 100 சுடுகாட்டுக் கொட்டகைகள்அமைத்ததில், ரூ.23 லட்சம் ஊழல் செய்ததாக, செல்வகணபதி உள்பட 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்திருந்தது.

இபிகோ பிரிவுகள் 120-பி, 420, 13(1)(டி) மற்றும் 13(2) ஆகியவற்றின் கீழ், இவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இந்த வழக்கின் மீதான விசாரணை, சிபிஐ நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,இந்த 6 பேருக்கும் குற்றப்பத்திரிகை வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று அந்த 6 பேரும் சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்து, குற்றப்பத்திரிகைகளைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த 6 பேரில், தற்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X