சென்னையில் தொடர்ந்து பதற்றம்
சென்னை:
நேற்று திமுக பேரணியில் நடந்த வன்முறை, போலீஸ் துப்பாக்கிச் சூட்டையடுத்து இன்றும் சென்னையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
எரிந்து போய் கூடுகளாய் நிற்கும் போலீஸ் ஜீப்புகள், அரசு பஸ், போலீஸ் வேன்கள் ஆகியவை நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன. கடற்கரைக்குவந்த பொது மக்கள் நிறுத்தி வைத்திருந்த பல வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
பல வாகனங்கள் திருடுபோய்விட்டன.
சாலையின் பல இடங்களிலும் ரத்தக் கரைகளும் உடைந்த கண்ணாடி சில்லுகளும் பரவிக் கிடக்கின்றன.
சென்னை முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போலீசார் தொடர்ந்து நகர் முழுக்கபாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுகவினரும் திமுகவினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகியிருப்பதால், மாநிலம் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications