ஜெ. ஆட்சியை கலைக்கக் கோர மாட்டேன்- கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நான் கோர மாட்டேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பதை திமுக விரும்பவில்லை. அதிமுக ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று நான் கோரவே மாட்டேன்.
ஆனால், போலீஸ் அராஜகம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் ஆளுநரிடம்வலியுறுத்தினேன். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தி தமிழக அரசின் மீதும்,போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்றைய வன்முறை தொடர்பாக நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு கல்யாணமண்டபங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அமைதியாக நடந்த பேரணியை அதிமுக ரெளடிகளை வைத்து போலீசார் தான் வன்முறையைத் தூண்டினர். அதிமுகரெளடிகள் திமுகவினர் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் தான் வன்முறை வெடித்தது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications