For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் காணாமல் போன 4 மீனவர்கள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கை கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்டு இந்தியா திரும்புகையில்காணாமல் போன 5 மீனவர்களில் 4 பேர் மீட்கப்பட்டனர். ஒருவரின் கதி என்ன ஆனதுஎன்று தெரியவில்லை.

இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததால், அந் நாட்டு கடலோர காவல் படையினரால்கைது செய்யப்பட்டிருந்த 19 மீனவர்கள், இந்திய கடலோர காவல் படையிடம் சிலதினங்களுக்கு முன் ஒப்படைக்கப்பட்டனர்.

மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த படகுகளும் அவர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

மீனவர்கள் 19 பேரும் படகுகளில் ராமேஸல்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக படகுகள் திசை மாறிப் போயின.இதில் 5 மீனவர்கள் காணாமல் போயினர்.

இவர்களை கடலோர காவல்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் தேடிவந்தன.இந்நிலையில் காணாமல் போன 4 பேரை கடலோர காவல் படையினர்ஜெகதாப்பட்டினம் அருகே கண்டுபிடித்து மீட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் மண்டபம் கொண்டுவரப்பட்டு அவர்கள் உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால், காணாமல் போன கோவிந்தன் என்ற ஒருவர் மட்டும் என்ன ஆனார் என்பதுதெரியவில்லை. கோவிந்தன் இலங்கை சிறையில் இருந்த போது கடும்வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சையும்செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X