ஆளுனரிடம் கருணாநிதி புகார்
சென்னை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தி.மு.க. பேரணியில் போலீசார் துப்பாக்கிச்சூடு குறித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி ஆந்திராவில் உள்ள ஆளுநர் ரங்கராஜனைதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் செய்தார்.
மேமபால ஊழல் வழக்கில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதுபோலீசார் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பேரணிநடந்தது.
பேரணிக்கு பின் சென்னை கடற்கரையில் சீரணி அரங்கில் பொதுக் கூட்டத்திற்கும்ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரணி மாலை 3 மணிக்கு தொடங்கியது. பெருந்திரளான தி.மு.க, தொண்டர்கள்பேரணியில் பங்கேற்றனர்.
பேரணி கடற்கரையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே சென்ற போதுதிடீரென வன்முறைஏற்பட்டது. பேரணியில் வந்தவர்கள் மீது போலீசார் தடியடிநடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதி.மு.க. தலைவர் கருணாநிதி ஆளுனர் ரங்கராஜனை கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் ரங்கராஜனும் உறுதிஅளித்தார்
போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பல்வேறு அரசுமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தொண்டர்களை முன்னாள்அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் கூறினார்.