For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இல்லை: மத்திய அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் பேசுயிைல்,

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. அங்கு போலீஸ் அராஜகம் தலைவிரித்துஆடுகிறது. அரசியல் சட்ட அடிப்படையில் இயங்கும் ஜனநாயக நாட்டில் இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார்.

கருணாநிதி தாக்கப்பட்டபோது மத்திய அமைச்சர்களிலேயே மிகக் கடுமையாக ஜெயலலிதாவைத் தாக்கிப்பேசியவர் ஜேட்லி தான். ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்இவர்.

இதற்கிடையே திமுக-அதிமுக உறுப்பினர்கள் மோதலையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்திங்கள்கிழமை முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன. முதலில் அரை நாள் ஒத்தி வைக்கப்பட்டன.

ஆனால், மீண்டும் பிற்பகலில் அவை கூடிய உடன் திமுக எம்.பிக்கள் மீண்டும் பிரச்சனையைக் கிளப்பினர்.இதையடுத்து லோக்சபாவை சபாநாயர் பாலயோகி ஒத்தி வைத்தார். அதே போல ராஜ்யசபாவை துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த் ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X