For Daily Alerts
Just In
மதுரையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
மதுரை:
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கடும் மழையின் போது மின்சார கம்பியை மிதித்ததால், 25 வயது வாலிபர்ஒருவரும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.
மதுரை ஜீவா நகரைச் சேந்த கூலி வேலை செய்து வரும் வாலிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
இவருடன் அவனியாபுரத்திற்கு அருகே உள்ள வலையப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மழையின் காரணமாக அறுந்து விழுந்திருந்த மின்சார கம்பியை இவர்கள் மிதித்த்தால் இருவரும்அந்தஇடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]