நாடாளுமன்றத்தின் வெளியிலும் தி.மு.க.- அ.தி.மு.க. மோதல்
டெல்லி:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. நடத்திய கண்டன பேரணியில் தி.மு.க.தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க. எம்.பிக்களும்,அ.தி.மு.க.எம்.பிக்களும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் ஒருவரைஒருவர் கடுமையாக சாடிக் கொண்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்புநிலவியது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க எம்.பிக்கள் தனித்தனியாகபத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
தி.மு.க. எம்.பி. வெற்றிச் செல்வனும், விடுதலை விரும்பியும் பத்திரிக்கையாளர்களைசந்தித்தரோது அ.தி.மு.க. மீது சராமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
வெற்றிச் செல்வன் பேரணியில் வந்து கொண்டிருந்த தன்னை போலீசார் லத்தியால்சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர் என்றும் தான் எம்.பி. என்று கூறிய பின்னும் அதைகாதில் வாங்காமல் போலீசார் தாக்கியதில் தனக்கு காலில் தொடைப் பகுதியில் பலத்தகாயம் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
சட்டையை கழற்றியவாறு அவர் நிருபர்களிடம் பேசினார். லோக்சபாவுக்கு உள்ளேயும்அவர் சட்டையைக் கழற்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நாடாளுமன்றத்தின் வெளியே திமுகவினர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோதேஇவர்களுக்கு சற்று தூரத்தில் அ.தி.மு.க. எம்.பிக்கள் பி.எச் பாண்டியன், மலைச்சாமிதலைமையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். தி.மு.கவினர் வன்முறையில்ஈடுபட்டதால்தான் போலீசார் தாக்குதல் நடத்தினர் என்று அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாகவே உள்ளது. சட்டம், ஒழுங்கு எந்த விதத்திலும்பாதிக்கப்படவில்லை என்று முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகரும், தற்போதையஅ.தி.மு.க. எம்.பியுமான பி.எச்.பாண்டியன் கூறினார்.
இரு அணியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடிக் கொண்டிருப்பதால்நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications