ஜெ.வுக்கு எதிரான சென்னை தொழிலதிபர் மனைவியின் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முதல்வர் ஜெயலலிதா தன் கணவனுக்கு எதிராக பொய்வழக்குகள் போடுவதாக குற்றம் சாட்டி சென்னைதொழிலதிபரின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சலாவுதீன் மீது போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக வழக்குதொடரப்பட்டது ஜெயலலிதாவின் முன்னாள் வளர்பு மகன் சுதாகரன் மற்றும் சலாவுதீனின் தம்பி மைதீன் மீதும்போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சலாவுதீன் மட்டும் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் சலாவுதீனின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். சொந்த காரணங்களுக்காக ஜெயலலிதா தன் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைகூறியுள்ளதாகவும் தன் கணவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், "என் கணவர் 1991-96ல் ஜெ ஜெ டிவிக்கு தொழில் நுட்ப ஆலோசனை வழங்கி வந்தார். ஜெயலலிதா1997ம் ஆண்டு என் கணவரை அழைத்து சுதாகரன் தன் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பணத்தை எங்குவைத்திருக்கிறார் என்ற விவரத்தை கூறுமாறு கேட்டார்.

ஆனால் என் கணவர் அது குறித்து எதுவும் தெரியாது என்று கூறியும், என் கணவரை ஜெயலலிதா மிரட்டினார்.தற்போது என் கணவர் மீது போதைப் பொருட்கள் வைத்துள்ளதாக பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதாவின் துணை செயலாளர் என் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதும், என்கணவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானவை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர்கள் பேசியதுடேப்பில் பதிவாகி உள்ளது" என்று தன் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.பி.பட்நாயக் மற்றும் நீதிபதி ருமா பால் ஆகியோர் அடங்கியபெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் சலாவுதீனின் வழக்குகள் சென்னையில் நடந்து கொண்டிருக்கும்போது சலாவுதீனின் மனைவி உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சலாவுதீனின் மனைவியின் வக்கீல் இதற்கு பதிலளிக்கையில், என் கட்சிக்காரர் சென்னையில் தன் உயிருக்கு ஆபத்துஏற்படக்கூடும் என்ற பயம் இருந்த காரணத்தால் தான் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார் என்றார்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக ஜெயலலிதா சலாவுதீன் மீது பொய் வழக்குபோட்டுள்ளதாகவும், சலாவுதீன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றுதாக்கல் செய்துள்ள மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+