சென்னை வந்தார் ரங்கராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக பேரணியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் வன்முறையிலும் 5 திமுக தொண்டர்கள் கொல்லப்பட்டதையடுத்துதமிழக ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் ஆந்திர மாநில ஆளுனர் ரங்கராஜன் இன்று (திங்கள்கிழமை) சென்னை விரைந்துவந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள ரங்கராஜனை ஏற்கனவே கருணாநிதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களைவர்ணித்தார். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரங்கராஜன் உறுதிமொழி அளித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவும் ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விரல் துண்டிப்பு:

வன்முறையில் இறங்கிய திமுக தொண்டர்கள் ஒரு போலீஸ்காரரின் விரலைத் துண்டித்துவிட்டனர். ரத்தக் காயத்துடன் அவர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

போலீஸ்-திமுக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது, கடற்கரை சாலையில் உள்ள குப்பங்களைச் சேர்ந்த ரவுடிக்கும்பல்களும் இந்த சண்டையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

அவர்கள் கையில் கிடைத்ததை எடுத்து கண்ணில் படுபவர்களை எல்லாம் தாக்கினர். போலீஸ், திமுக தொண்டர்கள் கையில்இருந்த வாட்ச், மோதிரங்கள், பணத்தைப் பறிக்கும் செயலில் இந்தக் கும்பல்கள் ஈடுபட்டன.

பேரணியில் கடைசியில் வந்த தொண்டர் கூட்டம் தான் வன்முறையைத் தூண்டிவிட்டதாக அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்களும், போலீசாரும் தெரிவித்தனர்.

முத்துக்கருப்பன் பேட்டி:

சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில்,போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் தான் இறந்தார். கலவரக் கும்பல் தாக்கியதில் 32 போலீசார் காயமடைந்துள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+