Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திட்டமிட்டு தாக்கினர்: கருணாநிதி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தி.மு.க.கண்டன பேரணியில் கலந்து கொண்ட தி.மு.க.தொண்ர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதையும், துப்பாக்கிசூடு நடத்தியதையும் தி.மு.க.தலைவர் கருணாநிதி வன்மையாக கண்டித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க.சார்பில் கண்டன பேரணி நடந்தது. இந்த பேரணி சென்னை கடற்கபையில்உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தைக் கடக்கும் போது வன்முறை ஏற்பட்டது.

அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தி.மு.க.தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.போலீசார்தி.மு.க.தொண்டர்கள் மீது நடத்திய தடியடி நடத்தியதையும், துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் தி.மு.க. தலைவர்கருணாநிதி வன்மையாக கண்டித்துள்ளார்.

சென்னை கடற்கரையில் சீரணி அரங்கில் நடந்த பொதுக்கூட்டதில் அவர் பேசுகையில் கூறியாதவது:

நான் பேரணியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தொலைக்காட்சி மூலம் பேரணியை பார்த்தேன்.லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பேரணியை அமைதியாக நடத்த வேண்டும் என்று நான் தொண்டர்களை கேட்டுக் கொண்டேன். ஆனாலும்மறைமலை அடிகளார் பாலத்தில் இருந்து காமராஜர் சாலை வரை பேரணியில் காட்டிய அமைதி, கட்டுப்பாட்டுக்குமதிப்பளிக்க முடியாத போலீசார், ஆத்திரத்தில் திமுக தொண்டர்களை அடித்து காயப்படுத்தி உள்ளனர்.

அவர்கள் இந்த மேடைக்கு ரத்தம் சொட்டச் சொட்ட வந்ததை பார்த்திருப்பீர்கள். எத்தனைபேர் தாக்கப்பட்டார்கள்,என்னென்ன ஆகியுள்ளது என்பது நாளை (திங்கள்கிழமை) தான் தெரியும்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தடியடிப் பிரயோகம், கண்ணீர் புகைக் குண்டு வீச்சு என்றுதிட்டமிட்டபடி செயல்படுத்தி உள்ளனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட கட்சியினருக்கு எனது நெஞ்சத்தில் இருந்து ஆழ்ந்தஆறுதலையும், நன்றியையம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா அரசின் இந்த செய்கைகள் விபரீதமாகி விடக்கூடும் என்பதால் இந்தக் கூட்டத்தை நீண்ட நேரம்நடத்த முடியாது என்று அன்பழகன் கூறியது போல், இங்குள்ள நிலைகளை உணர்ந்து உங்களை வீடுகளுக்கும்,ஊர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

தடியடிப் பிரயோகத்தை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் நடத்தவில்லை. நம் நாட்டைச் சேர்ந்த ராமசாமியும்,கந்தசாமியும் தானே அவர்கள். காக்கிச்சட்டை போட்டதும் அவர்கள் கடினசாமிகளாகிவிட்டனர்.

உங்களை அடித்தவர்கள் உங்கள் சகோதரர்கள்தான். எய்தவன் இருக்க அம்பை நோவதேன். அம்பை நொந்துகொள்வது முட்டாள்தனம். எய்தவர்கள் யார் என்பதை எண்ணிப்பார்த்து தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க தயாராகஇருக்க வேண்டும்.

நான் நெருப்புத்துண்டங்களை வீச இருக்கிறேன் என்று எனக்கு முன் பேசிய நடிகர் சரத்குமார் கூறினார்.நெருப்புத்துண்டங்களை இப்போது வீச மாட்டேன். எப்போது வீச வேண்டுமோ அப்போது வீசுவேன்.

பேரணி முழுவதும் அமைதி காத்த நீங்கள் அனைவரும் இனியும் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என்றுகூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+