For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டான்சி வழக்கு: ஜெ. அப்பீல் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீட்டின்விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டான்சி வழக்கில், ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் தண்டனை அளித்து, முந்தைய திமுக ஆட்சியினரால்அமைக்கப்பட்ட தனி நீதிமன்றனம் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பின் காரணமாகத்தான் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியவில்லை.இந்நிலையில் தனக்கு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

பலப்பல ஒத்தி வைப்புகளுக்குப் பின்னர், இந்த மேல் முறையீட்டின் மீதான விசாரணை மீண்டும் திங்கள்கிழமைவருவதாக இருந்தது.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தவிர, வேறு வழக்கறிஞர்கள் யாரும் திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்திற்குவரவில்லை. ஆனாலும், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள்நீதிபதியைக் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், சிறப்பு வழக்கறிஞர்கள் வந்தால் விசாரணையை நடத்த முடியும் என்று கூறி, நீதிபதி பாலசுப்பிரமணியம்இந்த விசாரணையை ஒத்தி வைத்தார்.

முன்னதாக, டான்சி வழக்கில், ஜெயலலிதாவுக்குச் சாதகமாக சாட்சிகள் திரும்ப ஆரம்பித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, முன்னாள் சார்பதிவாளர் தங்கவேல், "டான்சி நிலம் வாங்கியதில் எந்த விதமானமுறைகேடும் நடக்கவில்லை. நான்தான் தவறான விலைகளை குறிப்பட்டுவிட்டேன். டான்சி நில விவகாரத்தில்அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை" என்று கூறியிருந்தார்.

டான்சி வழக்கின் முக்கிய சாட்சியான இவருடைய இந்த பல்டி காரணமாக, இந்த வழக்கில் பெரும் திருப்பம்ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மேல் முறையீட்டின் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X