பாமக வந்தால் நாங்கள் போவோம்: திருமாவளவன்
சென்னை:
தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ப்பது தொடர்பாக கருணாநிதி சமரசமுயற்சி மேற்கொண்டால், எங்கள் அமைப்பு அதை ஏற்காது. பா.ம.க. இருக்கும் கூட்டணியில் எங்கள் அமைப்புஇருக்காது என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ராமதாஸ் தன்னை சந்தித்து பேசிய பின்னரே பா.ம.கவை, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு உள்ளது.விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கும், பா.ம.கவிற்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
பா.ம.கவை, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முன் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
ஆனால், கருணாநிதியின் சமரச பேச்சை விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஏற்காது என்று திருமாவளவன் தற்போதுகூறியுள்ளார். இது குறித்து சென்னையில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறும்போது:
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைப்பற்றி ராமதாஸ் மிகவும் மோசமாக விமரிசனம் செய்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் அமைப்பு கொள்கை, நெறியற்ற வன்முறை கும்பல் என்று கூறியுள்ளார்.
எங்களை இவ்வாறு மோசமான முறையில் விமரிசனம் செய்த பா.ம.கவுடன் நாங்கள் இணைந்துசெயற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. தி.மு.க.தலைவர் கருணாநிதி எந்த விதமான சமரச முயற்சியில்ஈடுபட்டாலும்,ரமதாசுடன் அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டேன்.
ராமகதாசுடன் இதற்கு மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், அது மிகக் கேவலமான செயலாக இருக்கும்.விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தலித் அமைப்புகளுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க. தலைவர்கருணாநிதியையும் பா.ம.க.தலைவர் ராமதாஸ் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார்.
பா.ம.க. சேர்ந்துள்ள கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இருக்காது. தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால் நாங்கள் அந்த அணியில் இருந்து வெளியேறுவோம்.
தி.மு.க. அணியில் பா.ம.க. சேர்ந்தால் அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், எனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எங்கள் அமைப்பின் மத்திய கமிட்டியும், தலித் மக்களும் கூறிவருகின்றனர்.
தேவை ஏற்பட்டால் நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் மங்களூர் தொகுதியில்போட்டியிட தயங்க மாட்டேன் என்றார்.