For Daily Alerts
Just In
எம்எல்ஏ பெருமாள் உடல் தகனம்
சென்னை:
திமுக பேரணி வன்முறையைத் தொடர்ந்து, மாரடைப்பால் இறந்த சென்னை-சைதாப்பேட்டை எம்.எல்.ஏவான வை.பெருமாளின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) தகனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மற்றும் ஏராளமானதொண்டர்களும் பெருமாளின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பெருமாளின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஸ்டாலின் தலைமையில் ஏராளமான திமுக தொண்டர்கள்இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் பெருமாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]