குருவாயூர்: ஜெ. கொடுத்த யானைக்கு பாதுகாப்பு
குருவாயூர்:
குருவாயூர் கோவிலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காணிக்கையாக கொடுத்த யானைக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வென்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி கிருஷ்ணா என்ற 12 வயது யானையைகுருவாயூருக்கு காணிக்கையாக வழங்கினார். அந்த யானை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தப்படும்யானைகள் வைக்கப்பட்டிருக்கும் வளாகமான புன்னத்தூர் யானைகள் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னத்தூர் யானைகள் வளாகத்திற்கும் சென்றுஇந்த யானையை பார்க்கிறார்கள். இது ஜெயலலிதா வழங்கிய யானை என்பதால் இதற்கு வி.ஐ.பி. அந்தஸ்துகிடைத்துள்ளது.
தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட பின் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையேதொடர்ந்து கசப்புணர்வு நிலவி வருகிறது.
இதனால் ஜெயலலிதா காணிக்கையாக கொடுத்த யானைக்கு தி.மு.க. தொண்டர்களால் ஆபத்து வரக்கூடும் என்றுகோவில் நிர்வாகம் கருதுகிறது. இதையடுத்து கிருஷ்ணாவைச் சுற்றிலும் வேலி போடப்பட்டுள்ளது.