இன்று அறிக்கை அனுப்புகிறார் ஆளுநர்
சென்னை:
திமுக பேரணியின்போது நடந்த வன்முறை குறித்து மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் ரங்கராஜன் இன்று(செவ்வாய்க்கிழமை) விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பவுள்ளார்.
அந்தப் பேரணியின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்உயிரிழந்தனர்.
வன்முறைக்குப் போலீஸாரும், அதிமுகவினரும்தான் காரணம் என்று திமுக தரப்பில் ஆளுநர் ரங்கராஜனிடம் புகார்கொடுக்கப்பட்டது. இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி,ஆளுநரை நேரில் சந்தித்தபோது கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் தரப்பில் தலைமைச் செயலாளர் பி.சங்கர் ஆளுநரை நேரில் சந்தித்து வீடியோபடங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் தமிழக அரசின் விளக்கத்தை நேரில் சந்தித்துக்கொடுத்தார்.
இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப ஆளுநர் ரங்கராஜன் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. தலைமைச் செயலாளர் சங்கர், மாநகர ஆணையர் முத்துக்கருப்பன் ஆகியோர்கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் ஆளுநர் அறிக்கை அனுப்பவார் என்றும்கூறப்படுகிறது. அனேகமாக செவ்வாய்க்கிழமையே இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications