For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப மத்திய அரசு அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஆய்வுப் பணிகளுக்காக சந்திரனுக்கு செயற்கைகோள் அனுப்பும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அரசின் முதன்மை பாதுகாப்பு ஆலோசர்அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு இணையான சாதனை நிகழ்தி வரும் இந்தியா, சந்திரனுக்குராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ராக்கெட்அனுப்புவதற்கான திட்டங்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது.

இந்த திட்டம மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டத்திற்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி பேசும் போதுஅப்துல் கலாம் தெரிவித்ததாவது:

இளைஞர்களின் விடா முயற்சி, கடுமையான உழைப்பின் மூலமும் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்கமுடியும்.

ஆய்வுப் பணிகளுக்காக சந்திரனுக்கு செயற்கைகோள் அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது. இந்த ஆய்வுக்கு வேண்டிய எல்லா தகுதிகளையும் இந்தியா பெற்றுள்ளது என்று அப்துல் கலாம்தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X