ராணுவ ரகசியங்களை விற்ற அதிகாரி கைது
ஹைதராபாத்:
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதாக இந்தியக் கப்பற்படை அதிகாரி ராஜ்பீர்சிங்என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 1996ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்ட் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோதுபாகிஸ்தானிய உளவுப்படையினருடன் ரகசியமாகப் பேசியதாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அப்போது, பாகிஸ்தான் உளவுப்படையினரிடம் ராஜ்பீர்சிங் ராணுவரகசியங்களைத் தெரிவித்தார். இதற்காக அவர்பாக். உளவுத்துறையிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் என்றும்புலனாய்வுத்துறை துப்புத்துலக்கி கண்டுபிடித்தது.
இதையடுத்து புலனாய்வுத்துறை ஆந்திர மாநில போலீசாருக்குத் தகவல் கொடுத்தது.
ஆந்திர போலீசார் விரைந்து சென்று விசாகபட்டிணத்தில் இருந்த ராஜ்பீர்சிங்கை கைது செய்தனர். பின்னர் இவர்ராணுவ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.